/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு ஆண்டாக நடந்து வரும் மாநகராட்சி புதிய கட்டடப் பணி
/
இரு ஆண்டாக நடந்து வரும் மாநகராட்சி புதிய கட்டடப் பணி
இரு ஆண்டாக நடந்து வரும் மாநகராட்சி புதிய கட்டடப் பணி
இரு ஆண்டாக நடந்து வரும் மாநகராட்சி புதிய கட்டடப் பணி
ADDED : டிச 12, 2025 05:48 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வரும் நிலையில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக சாத்துார் ரோட்டில் 2.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 1.75 ஏக்கர் நிலத்தில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகமும், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.5 கோடியில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
புதிய மாநகராட்சி அலுவலகத்தில் கீழ் தளத்தில் 15,970 சதுர அடி பரப்பளவில் பார்க்கிங் வசதி, தரை தளத்தில் 15, 920 சதுர அடி பரப்பில் மேயர், கமிஷனர், துணை மேயர், வரி வசூல் மையம், ஆய்வு கூட்ட அரங்கு, முதல் தளத்தில் 14,638 சதுர அடியில் பொறியியல் பிரிவு, 100 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கு, பிற துறைகளுக்கான தனித்தனி அறைகளுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2024 மார்ச் மாதம் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக பணிகள் நடந்து வரும் நிலையில் முழுமையாக முடிந்து எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கமிஷனர் சரவணன், மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் முழுமையாக முடிந்து 2026 பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

