sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கட்டியும் செயல்படாத பேரூராட்சி அலுவலக கட்டடம்

/

கட்டியும் செயல்படாத பேரூராட்சி அலுவலக கட்டடம்

கட்டியும் செயல்படாத பேரூராட்சி அலுவலக கட்டடம்

கட்டியும் செயல்படாத பேரூராட்சி அலுவலக கட்டடம்


ADDED : ஆக 30, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம் செயல்பாட்டுக்கு வராமல் பல மாதங்களாக வீணாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் பல்வேறு பேரூராட்சிகளில் மூலதன நிதியிலிருந்து புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

2021- -22ல் வத்திராயிருப்பு பேரூராட்சியில் ரூ.1.1 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது புதிய அலுவலகம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் பயன்படுத்தப்படாத இந்த கட்டிடம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் புதிய கட்டடமும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

எனவே, இந்த புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்திராயிருப்பு பேரூராட்சி கவுன்சிலர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us