sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டிராபிக் போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! போக்குவரத்து நெரிசலோடு விபத்திற்கும் வழிவகுப்பு

/

டிராபிக் போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! போக்குவரத்து நெரிசலோடு விபத்திற்கும் வழிவகுப்பு

டிராபிக் போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! போக்குவரத்து நெரிசலோடு விபத்திற்கும் வழிவகுப்பு

டிராபிக் போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்! போக்குவரத்து நெரிசலோடு விபத்திற்கும் வழிவகுப்பு


ADDED : ஜன 12, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : மாவட்டத்தில் டிராபிக் போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது. காலிப்பணியிடங்களை நிரப்பி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்துார், ஸ்ரீவி., காரியாபட்டி நகரங்கள் உள்ளன. அனைத்து நகரங்களிலுமே 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தற்போது நகரங்களிலும் மக்கள் தொகை எத்தனையோ மடங்கு உயர்ந்து விட்டது. டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நகரங்களிலும் தொழில்ரீதியாக அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றது. பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஆனால் டிராபிக் போலீசார் மட்டும் குறைந்தளவில் பணிபுரிகின்றனர்.

சிவகாசியில் காலை பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. . சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, விளாம்பட்டி ரோடு, தேரடி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் அவதி பட நேரிடுகின்றது. மேலும் பெரும்பான்மையான நகரங்களில் டிராபிக் சிக்னல்களும் செயல்படாத காரணத்தால் , போக்குவரத்தை சரி செய்ய , குறைந்த அளவில் பணியில் இருக்கும் டிராபிக் போலீசார் சிரமப்படுகின்றனர்.

சிவகாசியில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள் உட்பட 70 டிராபிக் போலீசார் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 25 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதே நிலைதான் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் குறைந்த அளவு போலீசார் பணியில் உள்ளனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு , அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பால் ் அனைத்து பகுதிகளிலும் ரோடுகள் குறுகி விட்டன. எனவே மாவட்டம் முழுவதும் டிராபிக் போலீசாரை கூடுதலாக நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us