sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குல்லுார்சந்தை அணைக்கு செல்லும் ரோடுகள் மோசம் குண்டும் குழி பள்ளங்கள், மண் அரிப்பால் அவதி

/

குல்லுார்சந்தை அணைக்கு செல்லும் ரோடுகள் மோசம் குண்டும் குழி பள்ளங்கள், மண் அரிப்பால் அவதி

குல்லுார்சந்தை அணைக்கு செல்லும் ரோடுகள் மோசம் குண்டும் குழி பள்ளங்கள், மண் அரிப்பால் அவதி

குல்லுார்சந்தை அணைக்கு செல்லும் ரோடுகள் மோசம் குண்டும் குழி பள்ளங்கள், மண் அரிப்பால் அவதி


ADDED : ஜன 02, 2024 04:56 AM

Google News

ADDED : ஜன 02, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: குல்லுார்சந்தை அணைக்கு விருதுநகரில் இருந்தும், மெட்டுக்குண்டுவில் இருந்தும் செல்லும் ரோடுகள் குண்டு குழி பள்ளங்களாலும், மண் அரிப்பு ஏற்பட்டும் மோசமான நிலையில் உள்ளன.

விருதுநகரின் முக்கிய நீர்நிலையாக குல்லுார்சந்தை அணை உள்ளது. இந்த அணை கவுசிகா நதியின் நீர்வரத்தால் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., அணையை கட்டிய காலத்தில் பூங்கா நிறுவப்பட்டது.

ஆனால் தற்போது அணையின் பூங்காவின் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருபிடித்து சிதிலமடைந்து விட்டன. தற்போது அணையை உயிர் பன்மை தலமாக இயற்கை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சுற்றி காட்ட மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆனால் குல்லுார்சந்தை அணைக்கு விருதுநகரில் இருந்தும், மெட்டுக்குண்டு வழியாகவும் வரும் ரோடுகள் மோசமான நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு ரோட்டில் துவங்கும் பாதை மாத்தநாயக்கன்பட்டி வழியாக செல்கிறது. இப்பகுதியில் உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தார் அனைத்தும் பெயர்ந்து விட்டதால் பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

இதே போல் அருப்புக்கோட்டை பாலவநத்தம் மெட்டுக்குண்டு வழியாக குல்லுார்சந்தை வரும் வழியில் டிச. 18ல் பெய்த கனமழையால் வரத்து ஓடைகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள ரோடுகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயமும் அதிகம் உள்ளது.

குல்லுார் சந்தை அணையை உயிர் பன்மை தலமாக வன ஆர்வ மாணவர்களுக்கு சுற்றி காட்டும் முன் ரோடு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குல்லுார்சந்தை அணைக்கு முன்பு உள்ள தரைப்பாலம் இந்தாண்டு பெய்த கனமழையில் சேதமடைந்துள்ளது. பொதுப்பணித்துறை நிர்வாகம் அதையும் சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us