
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சடை உடையார் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா நடந்தது.
ஞான சாஸ்தா ஐயப்பன் பக்தர்களின் 23ம் ஆண்டு பூஜை முன்னிட்டு 3 நாள் விழாவில் முதல் நாள் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை, நாம கீர்த்தன பஜனை, கடைசி நாளில் அன்னதானம் நடந்தது.
மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத் தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை சடை உடையார் சாஸ்தா கோயில் நிர்வாகிகள் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

