/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது
/
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது
ADDED : செப் 22, 2024 03:58 AM
சிவகாசி, : தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது. என மாணிக்கம் தாகூர் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறினார்.
சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய மாணிக்கம் தாகூர் எம்.பி., மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை. மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.
2024 தேர்தலில் மக்கள் அதை நிராகரித்தனர். அதனால்தான் 303 இடங்களாக இருந்த பா.ஜ., எம்.பி., க்களை 240 ஆக மக்கள் குறைத்தனர். அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் தனியாக தேர்தல் நடத்துவதற்கு என்ன காரணம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெளிவேஷம் மட்டுமே. காங்., கட்சி உள் விவாகரங்களை குறித்து வெளியே பேச மாட்டோம்.
வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தனிக் கட்சியாக எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது.
கூட்டணியை பொறுத்தவரை ஒத்த கருத்தோடு உள்ளோம். அதேபோல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க., காங்., கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.