sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி தட்டாவூரணியில் குழாய் இருக்கு; குடிநீர் இல்லை

/

சிவகாசி தட்டாவூரணியில் குழாய் இருக்கு; குடிநீர் இல்லை

சிவகாசி தட்டாவூரணியில் குழாய் இருக்கு; குடிநீர் இல்லை

சிவகாசி தட்டாவூரணியில் குழாய் இருக்கு; குடிநீர் இல்லை


ADDED : டிச 28, 2024 05:41 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி தட்டாவூரணி பகுதியில் குழாய் பதிக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு தட்டாவூரணி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது.

இதற்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியம் கட்டப்பட்டது.

ஆனால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அதே சமயத்தில் சமீபத்தில் குழாய் வழியாக உப்பு தண்ணீர் மட்டும் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டது.

குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. குடிநீர் வாகனம் வரும் போதெல்லாம் சண்டை சச்சரவு ஏற்படுகின்றது.

மேலும் குடிநீரும் பற்றாக்குறையாக இருப்பதால் இப்பகுதியினர் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகின்றனர்.

எனவே மாநகராட்சி சார்பில் குழாய் மூலமாக சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us