sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி பிச்சாண்டி தெருவில் குடிநீர் வினியோகம் இல்லை

/

சிவகாசி பிச்சாண்டி தெருவில் குடிநீர் வினியோகம் இல்லை

சிவகாசி பிச்சாண்டி தெருவில் குடிநீர் வினியோகம் இல்லை

சிவகாசி பிச்சாண்டி தெருவில் குடிநீர் வினியோகம் இல்லை


ADDED : டிச 19, 2024 04:20 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பிச்சாண்டி தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் இதுவரையிலும் குழாய் பதிக்கப்படாததால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சி வாகனம் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற குடிநீர் போதாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி பிச்சாண்டி தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரையிலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு என குழாய் பதிக்கப்படவில்லை.

இதனால் குடிநீருக்காக பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது மாநகராட்சி வாகனம் மூலமாக 10 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இது போதுமானதாக இல்லாத நிலையில் குடிநீர் வாகனம் வரும்போதெல்லாம் குடிநீருக்காக சண்டை ஏற்படுகின்றது.

இதனால் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். சிலர் அருகில் உள்ள வார்டிற்குச் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.

எனவே மாநகராட்சி சார்பில் உடனடியாக குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us