sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீருக்கு தவிக்கும் 18 முதல் 22 வார்டு மக்கள்

/

திருத்தங்கலில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீருக்கு தவிக்கும் 18 முதல் 22 வார்டு மக்கள்

திருத்தங்கலில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீருக்கு தவிக்கும் 18 முதல் 22 வார்டு மக்கள்

திருத்தங்கலில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தண்ணீருக்கு தவிக்கும் 18 முதல் 22 வார்டு மக்கள்


ADDED : அக் 03, 2024 04:11 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பொதுவாகவே 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில் குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30 க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இதன்படி ஒன்று முதல் 17 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கான தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் இல்லை. இதற்காக 2019ல் பெரியகுளம் கண்மாயில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் தண்ணீர் வினியோகத்திற்காக இங்கிருந்து அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களை ஆங்காங்கே மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து, அருகே செல்வதற்கு கூட வழியில்லை. இதனால் இன்று வரையிலும் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இதனால் இப்பகுதியினர் குடிப்பதற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என புழக்கத்திற்கும் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்குகின்றனர். பட்டாசு, கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் தினமும் தண்ணீரை வாங்குவதற்கு வழியில்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு சீரான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us