ADDED : அக் 09, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் தொண்டர் குலாம் சார்பில் பெரிய பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பணம் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் திருக்குடைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சடகோபராமானுஜ ஜீயர் தலைமையில் மாடவீதிகள் சுற்றி வந்து பெரிய பெருமாள் சன்னதியில் சமர்ப்பிக்கப்பட்டது.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவண கார்த்தி, பா.ஜ.,மாவட்ட செயலாளர் சரவணன் துரைராஜா உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.