sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் கிழிந்த மெத்தைகள் உள்நோயாளிகள் பரிதவிப்பு

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் கிழிந்த மெத்தைகள் உள்நோயாளிகள் பரிதவிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் கிழிந்த மெத்தைகள் உள்நோயாளிகள் பரிதவிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் கிழிந்த மெத்தைகள் உள்நோயாளிகள் பரிதவிப்பு


ADDED : ஆக 15, 2025 02:22 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டு படுக்கைகளில் கிழிந்த மெத்தைகளை உள்நோயாளிகள் பயன்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் காலியான படுக்கைகளுக்கு கேட்டு மாறும் நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 640 படுக்கைகளில் இருந்து 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டது. இவற்றில் உள்நோயாளிகள் படுக்கைகளில் தற்போது பெரும்பாலான மெத்தைகள், தலையணைகள் மிகவும் மோசமாக கிழிந்து துாசி படர்ந்த நிலையில் உள்ளது.

ஆனால் படுக்கைகள் மீது விரிப்புகள், தலையணை உறைகள் அமைத்து இருப்பதால் சேதமானது வெளியே தெரியாதபடி உள்ளது. கிழிந்த மெத்தைகளில் அனுமதிக்கப்படும் வயதான நோயாளிகளின் சிறுநீர் துளிகள், வியர்வை நாற்றம் காணப்படுகிறது.

இவர்கள் டிஸ்சார்ஜ் செய்த பின் அந்த படுக்கையில் அனுமதிக்கப்படும் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மெத்தைகளின் மீது உள்ள விரிப்புகள், தலையணை உறைகள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் தாங்க முடியாமல் உள்நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதனால் வார்டுகளில் காலியான படுக்கைகளை தேடி பார்த்து டாக்டர்கள், செவிலியர்களிடம் தெரிவித்து நோயாளிகள் மாறி கொள்ளும் நிலையே தொடர்கிறது.

எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை வார்டுகளில் சேதமான மெத்தைகளை அகற்றி புதிய மெத்தைகளை அமைத்து நோயாளிகளின் நலன் காக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us