sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு

/

நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு

நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு

நவ. 29ல் கடையடைப்பு வர்த்தக சங்கம் அறிவிப்பு


ADDED : நவ 25, 2024 05:02 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் தீர்மானத்தை கண்டித்து சிவகாசியில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என வர்த்தக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பது என செப்டம்பரில் புதுடில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி நவ. 29ல் சிவகாசியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகாசி வர்த்தக சங்கத் தலைவர் ரவி அருணாச்சலம் கூறுகையில், சிறு வணிகர்கள் கடைகளுக்கு செலுத்தும் வாடகைக்கு அக். 10 முதல் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதிலும் நவ. 29ல் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

அதன்படி சிவகாசியிலும் முழு அடைப்பு போராட்டம் நடக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us