sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

/

அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு


ADDED : ஜூன் 02, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை ரோட்டில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ஆனால் டிராபிக் போலீசார் அவ்வாறு பணியில் ஈடுபடுவதில்லை. முக்கியஸ்தர்கள் வருகையின் போதும், வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக மட்டும் ரோட்டில் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் அரசு மகப்பேறு பிரிவிற்கு முன்னால் தற்போது நீளமான பேரிகார்டுகள் வைத்து ரோட்டை மறித்துள்ளனர். வளைவு பகுதியாக இருப்பதால் பஸ், லாரி, வேன் உள்பட பல வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன.

ஆம்புலன்ஸ் செல்லவும் தாமதமாகிறது. இதனால் ரோட்டை கடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இன்று பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்னும் நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே அரசு மகப்பேறு மருத்துவமனை ரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றி வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனை ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டிராபிக் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us