/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வடக்கு ரத வீதியில் கட்சியினரின் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு
/
சாத்துார் வடக்கு ரத வீதியில் கட்சியினரின் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு
சாத்துார் வடக்கு ரத வீதியில் கட்சியினரின் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு
சாத்துார் வடக்கு ரத வீதியில் கட்சியினரின் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 15, 2025 05:24 AM
சாத்துார்: சாத்துார் வடக்கு ரத வீதியில் கட்சியினர் நடத்தும் போராட்டங்களால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
சாத்துார் தாலுகா அலுவலகம் முன்பு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்து வந்தனர். அடிக்கடி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக தாலுகா அலுவலகத்திற்கும் அப்போது அந்தப் பகுதியில் இயங்கி வந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் தபால் அலுவலகத்துக்கும் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார், கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வடக்கு ரதவீதியை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். தற்போது வரை வடக்கு ரத வீதியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கண்டன பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் கட்சியினர் அனுமதி பெற்ற வடக்கு ரத வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் நடத்தாமல் சாத்துார் கோவில்பட்டி மெயின் ரோடு வடக்கு வீதி சந்திக்கும் முனையில் நின்று ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.
மிக அதிக அளவிலான கட்சியினர் கலந்து கொள்ளும் போராட்டங்களின் போது மெயின் ரோடு மட்டுமின்றி வடக்கு ரத வீதியில் செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக வடக்கு ரத வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் சிறு வியாபாரிகள் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது. போலீசார் பாதையை அடைக்காமல் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்ய வலியுறுத்தினாலும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் நோக்கில் பாதையை அடைத்தபடி நிற்கின்றனர்.
எந்த போராட்டங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் வாகன ஓட்டிகள் சிலர் மாற்றுவழியில் செல்லாமல் போராட்டம் நடைபெறும் பாதை வழியாக செல்ல முற்படுகின்றனர். இதனால் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது.
தற்போது வடக்கு வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்துவிட்ட நிலையில் போராட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாற்று இடத்தை போலீசார் தேர்வு செய்து அங்கு கட்சியினர் போராட அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.