ADDED : செப் 04, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: சிவகாசி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பட்டு வருகிறது.
வணிகர்கள், மக்கள், அஞ்சல் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரைவாகவும் எளிமையாகவும் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இங்கு தட்கல் வசதியும் உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முன்பதிவு செய்யப்படும். மக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.