sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்

/

இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்

இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்

இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்


ADDED : டிச 06, 2024 04:57 AM

Google News

ADDED : டிச 06, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடியில் பயணிகள் நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.

சாத்துார் நென்மேனி ரோட்டில் அமைந்துள்ள இருக்கன்குடிக்கு வெளியூரில் இருந்து வரும் பயணிகள் ரோட்டின் ஓரத்திலேயே இறக்கிவிடப்படுகின்றனர்.

நீண்ட துாரத்தில் இருந்து பயணம் செய்து வரும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கியதும் சிறிது நேரம் இளைப்பாற பயணிகள் நிழற்குடை வசதி இல்லை.

பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் கோயிலை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வயதான முதியவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது மழைக்காலமாக உள்ளது. வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உடமைகளை நனையாமல் பார்த்துக் கொள்ள மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

எனவே வெளியூர் பக்தர்கள் நலன் கருதி இருக்கன்குடியில் போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us