ADDED : அக் 01, 2024 11:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் துலுக்கன் குறிச்சியில் ஜெ.எஸ்.எஸ்., மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் இலவச ஆரிகலை சிறப்பு பயிற்சி, மரம் நடு விழா நடந்தது.
இதில் ஊராட்சித் தலைவர் கனகராஜ், ஊராட்சி செயலர் ஜெயபிரகாஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜ், கல்வி நிறுவனத்தின் திட்ட அலுவலர் கண்ணன், பயிற்றுநர்கள் ஜெமினா, சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு ஊர்வலமாக சென்ற பின்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
