ADDED : நவ 14, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி சூரனூர் சிவன் கோயில் வளாகத்தில் லயன்ஸ் கிளப் ஆப் ஜாஸ்மின் சார்பாக மரக்கன்று நடும் விழா நடந்தது.
தலைவர் ராசாத்தி தலைமை வகித்தார். செயலாளர் கீதா வரவேற்றார். ராமநாதபுரம் மெல்வின் கல்வி குழும சேர்மன் ஆல்பர்ட் ராஜா துவக்கி வைத்தார். இன்பம் பவுண்டேசன் நிறுவனர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், கோயில் குருக்கள் தெய்வசிகாமணி, பணித்தள பொறுப்பாளர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சைனிலா ரூபி நன்றி கூறினார்.

