ADDED : டிச 25, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கண்மாய்
ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் பழ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை பாரதி தலைமையில், ஆசிரியை சுதா, நாட்டு நல பணி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

