sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு

/

சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு

சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு

சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிப்பு


ADDED : மே 17, 2025 11:57 PM

Google News

ADDED : மே 17, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: -காரியாபட்டி பகுதியில் ஒரு வாரமாக சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

காரியாபட்டி பகுதியில் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு சான்றிதழ்கள், வருவாய் ஆவணங்கள், ஆதார், பான் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் இ சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு வாரமாக சர்வர் பழுது காரணமாக சரிவர செயல்படவில்லை.

தற்போது பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் சேர பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டி இ சேவை மையங்களை அணுகுகின்றனர். உரிய நேரத்தில் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்கிற பதட்டத்தில் அங்கும் இங்கும் அலைகின்றனர். சர்வர் பழுது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் துவக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இ சேவை மையம் இருந்தது. தற்போது ஏராளமான இ சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த சர்வர் மூலமாக இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இ சேவை மையங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்வரின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். இன்னும் பழைய சர்வரிலே அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே இ சேவை மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சர்வர் அல்லது கூடுதல் இணையதள சேவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us