ADDED : பிப் 28, 2026 06:21 AM
விருதுநகர்:மதுரை மாவட்டம் குன்னத்துர் மச்சகாளை 65, விருதுநகர் பரங்கிநாதபுரம் பார்த்தீபன் 35, கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
விருதுநகர் பரங்கிநாதபுரம் பார்த்தீபன். நேற்று முன்தினம் காலை இறந்து விட்டதால் உடல் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் பார்த்தீபனின் கண்கள் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் தானமாக பெறப்பட்டது.
* மதுரை குன்னத்துார் மச்சகாளை, நேற்று முன் தினம் இறந்தார். இவரின் கண்களும் தானமாக பெறப்பட்டது. கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

