sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர்கள் ஓட்ட சிறுவர்களுக்கு தேவை கடிவாளம்: பெற்றோரிடம் விழிப்புணர்வு போதவில்லை

/

டூவீலர்கள் ஓட்ட சிறுவர்களுக்கு தேவை கடிவாளம்: பெற்றோரிடம் விழிப்புணர்வு போதவில்லை

டூவீலர்கள் ஓட்ட சிறுவர்களுக்கு தேவை கடிவாளம்: பெற்றோரிடம் விழிப்புணர்வு போதவில்லை

டூவீலர்கள் ஓட்ட சிறுவர்களுக்கு தேவை கடிவாளம்: பெற்றோரிடம் விழிப்புணர்வு போதவில்லை


ADDED : பிப் 17, 2024 04:36 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் 15, 16, 17 வயதை நெருங்கும் சிறுவர்கள் ஆர்வமிகுதியால் வீட்டில் இருக்கும் டூவீலர்களை ஓட்ட கற்று கொள்கின்றனர். போதிய விதிமுறைகள் எதுவும் தெரியாத நிலையில் ரோடுகளில் குறுக்கே வந்து வாகனங்களில் செல்லும் பிறருக்கு பாதிப்பை தருகின்றனர்.

18 வயது தான் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கான வயது. அந்த வயதில் தான் ஆர்வ கோளாறு குறைந்து சிக்னல்களை மதிப்பது, கிராஸ் செய்வது, எச்சரிக்கை பலகைகளை கண்டறிவதற்கான தெளிவும், புரிவும் வரும். மேலும் இந்த வயதில் கல்லுாரிக்கு வேறு செல்வதால் சிறிது பக்குவமும் ஏற்படும்.

இந்நிலையில் பலர் ஆர்வக்கோளாறு காரணமாக முன்பே டூவீலர் ஓட்ட கற்று கொள்கின்றனர். இதை பெற்றோரும் அனுமதிக்கின்றனர். குறிப்பாக இவ்வாறு பழகும் சிறுவர்களுக்கு சரிவர கிராஸ் செய்ய தெரியாது, முந்தி செல்வது பற்றி தெரியாது, இன்டிகேட்டரை பயன்படுத்தி திருப்புவது தெரியாது.

இவ்வாறு டூவீலர் ஓட்டும் போது அவர்கள் செய்யும் சிறிய தவறு அவர்கள் உயிரை பலியாய் கேட்கிறது. 2 நாட்கள் முன் ஆமத்துார் அருகே சுகாதாரத்துறையின்மக்களை தேடி மருத்துவம் வாகனம் சென்ற போது குறுக்கே டூவீலரில் வந்த சிறுவன் விபத்தில் சிக்கினார்.

இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதே போல் நாகர்கோவிலில் மற்றொரு விபத்தில்3 கி.மீ., துாரத்திற்கு மாணவர் ஒருவர்இழுத்து செல்லப்பட்டு கோரமாக இறந்தார்.

இந்த சம்பவங்கள்பலி என்பதால் பலருக்கு தெரிய வந்துள்ளது. தினசரி சிறுவர்கள் வாகனங்களை இயக்கி காயப்படுவதும் நிறைய உள்ளது. இதை யாருமே கண்டு கொள்வதே கிடையாது. பெற்றோரின் அலட்சியமே இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் எந்த பெற்றோரும் இதற்காக அஞ்சுவதாக தெரியவில்லை. சட்ட கெடுபிடிகளும் பெரிதாக இல்லை. இதனால் நாளுக்கு நாள் சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்துள்ளது.

இதில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது தான் உள்ளது. மாணவர்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்தால் போலீசார் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us