/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
/
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
சிவகாசியில் பயன்பாட்டிற்கு வந்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : ஜூலை 12, 2025 04:23 AM

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சி 43வது வார்டு அம்மன் கோவில்பட்டி தென்பாக தெருவில் நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு பயன்பாட்டிற்கு வந்தது.
சிவகாசி மாநகராட்சி 43வது வார்டு அம்மன் கோவில்பட்டி தென்பாகம் தெருவில் நகர்புற நல்வாழ்வு மையம் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சத்தில் நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு திறப்பு விழா நடந்தது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள்,உதவியாளர்கள் என எந்தப் பணியிடமும் நிரப்பப்படவில்லை.
மேலும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிறிய காய்ச்சல், தலைவலி என்றால் கூட அதிக துாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அலைய நேரிட்டது.
நீண்ட நாட்கள் கட்டடம் பயன்பாட்டில்இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது. இதே நிலை நீடித்தால் பயன்பாட்டிற்கு வராமலேயே கட்டடம் சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
எனவே இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி மருத்துவ உபகரணங்கள் ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக இங்கு டாக்டர், செவிலியர்பணியாளர் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்நிரப்பப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. துவக்க விழாவில் மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.