sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்

/

சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்

சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்

சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்


ADDED : மே 02, 2025 06:00 AM

Google News

ADDED : மே 02, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் சுற்று கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு மின் திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாத்துார், சுற்றுக் கிராமங்களில் தற்போது சித்திரை மாதத்தை முன்னிட்டு காளியம்மன், பத்ரகாளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு பொங்கல் வைபவம் நடைபெற்று வருகிறது.

இந்நேரங்களில் உயரழுத்த மின் கம்பிகளில் அனுமதியின்றி வயர்களை கொக்கி மூலம் பொருத்தி மின்சாரம் எடுப்பது வழக்கம். விபத்துக்கள் ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிர்கள் பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும் போது அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

திருவிழா போன்ற தருணங்களில் விழா ஏற்பாட்டாளர்கள் முறைப்படி மின் வாரியத் துறையினரை அணுகி தங்களுக்கு தேவையான மின்சாரத்தை முறைப்படி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லது ஜெனரேட்டர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி திருவிழா சமயங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விடுத்து உயர் அழுத்த கம்பிகள் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும் போது மின்துறையில் நஷ்டம் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது.

எனவே திருவிழா சமயங்களில் மின்திருட்டு ஏற்படுவதை தடுக்க மின்சார வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us