sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பல் சிகிச்சை துறையில் காலிப்பணியிடங்கள் 3 ஆண்டாக நோயாளிகள் அவதி

/

 பல் சிகிச்சை துறையில் காலிப்பணியிடங்கள் 3 ஆண்டாக நோயாளிகள் அவதி

 பல் சிகிச்சை துறையில் காலிப்பணியிடங்கள் 3 ஆண்டாக நோயாளிகள் அவதி

 பல் சிகிச்சை துறையில் காலிப்பணியிடங்கள் 3 ஆண்டாக நோயாளிகள் அவதி


ADDED : நவ 21, 2025 04:39 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் பல் சிகிச்சை துறையில் 44 டெக்னீசியன் காலிப்பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால் மேல் சிகிச்சை என்ற பெயரில் பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு நோயாளிகளை மாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது.

தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. இவற்றில் பல் சிகிச்சை துறையில் புதிதாக பற்கள் பொருத்துவதற்கும், சேதமான பற்களை வேர்சிகிச்சை செய்து அதன் மீது தொப்பி பொருத்துவதற்காக 44 டெக்னீசியன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.

மூன்று ஆண்டுகளை கடந்தும் ஒன்று கூட நிரப்பப்படவில்லை. இதனால் புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் வேர்சிகிச்சை, பற்கள் அகற்றம், சுத்தம் செய்தல் ஆகிய சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படுகிறது.

புதிய பற்கள், சேதமான பற்கள் மீது தொப்பி பொருத்துதல், பற்கள் சீரமைப்பு சிகிச்சைகளுக்காக வருபவர்களை பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு அனுப்புகின்றனர். மக்கள் அலைச்சலை தடுக்க 44 பல் சிகிச்சை டெக்னீசியன் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us