sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மரத்தில் கார் மோதிய விபத்தில் வி.ஏ.ஓ., மனைவி, குழந்தை பலி

/

மரத்தில் கார் மோதிய விபத்தில் வி.ஏ.ஓ., மனைவி, குழந்தை பலி

மரத்தில் கார் மோதிய விபத்தில் வி.ஏ.ஓ., மனைவி, குழந்தை பலி

மரத்தில் கார் மோதிய விபத்தில் வி.ஏ.ஓ., மனைவி, குழந்தை பலி


ADDED : ஜூலை 08, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: மரத்தில் கார் மோதிய விபத்தில், பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், வடமலைகுறிச்சி தாலுகாவிற்குட்பட்ட நஞ்சுரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் முருகன், 38; சாலைக்கிராமம் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தோடு சாலைக் கிராமத்தில் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம், குடும்பத்தோடு காரில் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு, கிராமத்திற்கு நேற்று திரும்பினர். காரை முருகன் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 1:30 மணி அளவில் கோட்டையூர் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில், முருகன் மனைவி சுப்புலட்சுமி, 32, அவரது மகள் மதிவதனி, 8, ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மகளான சுவையாழினி, 5, முருகன் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us