sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்

/

 வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்

 வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்

 வீரசோழன் சார்பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம்


ADDED : நவ 28, 2025 09:07 AM

Google News

ADDED : நவ 28, 2025 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழன் சார் பதிவாளர் அசோக்குமார் 44, காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 24 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அசோக்குமார் சார் பதிவாளராக 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

பத்திரப்பதிவுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் முத்துமாரி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து அசோக்குமார் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.

காரிலிருந்த பையில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம் என தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us