ADDED : ஜன 30, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி; காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் வேளாண், உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான காய்கறி திருவிழா நடந்தது.
காணொளி வாயிலாக கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார். வேளாண் இணை இயக்குனர் விஜயா குத்து விளக்கு ஏற்றினார். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் செல்வி, ரமேஷ், சுப்பிரமணியன், கிருஷ்ணகுமார் பேசினர். இயக்குனர்கள் நாச்சியார், வளர்மதி, சுமதி, ரமேஷ் கலந்து கொண்டனர். மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை, தனியார் நிறுவனங்கள் மூலம் கண்காட்சி திடல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனரF் ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குனர்கள் கார்த்திக், கீதா செய்தனர்.

