sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

/

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்


ADDED : ஆக 25, 2011 11:41 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி பகுதியில் குளங்களில் தேங்கியுள்ள, சுத்திகரிக்கப்படாத மழைநீரை மக்கள் குடிக்க பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.

நரிக்குடி ஒன்றியம் ஆண்டியேந்தல் ஊராட்சியை சேர்ந்த சாத்திசேரி, எஸ்.வல்லக்குளம், கிழாக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வி.புதூரிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தத் தண்ணீர் உவர்ப்பு தன்மையாக இருந்தாலும் மக்கள் வேறு வழியின்றி அதையே குடித்து வருகின்றனர். இந்நிலையில், மோட்டார் பழுதடைந்ததால் அந்த உப்பு நீரையும் ஒரு வாரமாக வழங்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எஸ்.வல்லக்குளம் கிராம மக்கள் 2 கி.மீ., தூரம் நடந்து கிளவிகுளம் விலக்கிற்கு வந்து, மோட்டார் அறை அருகே சிந்துகின்ற தண்ணீரை குடிக்க எடுத்து செல்கின்றனர். சாத்திசேரி மக்கள் 2 கி.மீ., தூரம் காட்டுக்குள் நடந்து, அருகே உள்ள உப்பள ஓடை தண்ணீர் எடுத்து வருகின்றனர். தற்சமயம் மழை பெய்ததால், ரோட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரையும் எடுக்கின்றனர். கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள், மழை பெய்யும்போது வீட்டின் ஓடுகளில் இருந்து வழிகின்ற தண்ணீரை குடங்களில் சேமித்து குடிக்கின்றனர். ''எங்களுக்கு கண்மாய் தண்ணீர் கூட கிடைக்கவில்லை,'' என ஆண்டியேந்தல் மக்கள் புலம்புகின்றனர். இவ்வூர் மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us