sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு

/

நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு

நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு

நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு


ADDED : ஆக 25, 2011 11:41 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : இரவு நேரத்தில் பஸ்கள் நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையிலே செல்வதால் வெளியூர் சென்று வரும் பயணிகள் தவிக்கின்றனர்.

மதுரை-தூத்துக்குடி சாலையில் காரியாபட்டி அமைந்துள்ளது. சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல காரியாபட்டிக்கு வருகின்றனர். இதற்கு காரணம், 24 மணி நேரமும் இந்த வழித்தடத்தில் பஸ் வசதி உள்ளது. கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களில் காரியாபட்டிக்கு வந்து, பின் வெளியூர்களுக்கு சென்று, இரவில் எந்த நேரத்திலும் வீட்டிற்கு சென்று வந்தனர். இந்த வசதி நான்கு வழிச்சாலை போடுவதற்கு முன் பயன்பாட்டில் இருந்தது. தற்போது நான்கு வழிச்சாலை ஏற்படுத்தியபின் இரவு 10 மணிக்கு மேல் மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடியிலிருந்து வரும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்வது கிடையாது. மதுரையில் ஏறினால் காரியாபட்டியில் நிற்காது என கூறி அருப்புக்கோட்டை பைபாசில் இறக்கிவிடுகின்றனர். அருப்புக்கோட்டையில் ஏறினால் காரியாபட்டியில் நிற்காது என ஏற்ற மறுக்கின்றனர். இதனால் செய்வதறியாது பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி, இரவு நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் அனைத்து அரசு பஸ்களையும் காரியாபட்டி நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us