ADDED : செப் 01, 2011 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : சிவகாசி அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 53.இவருக்கு ஒண்டிப்புலிநாயக்கனுர் பகுதியில் 18.70 ஏக்கர் நிலம் உள்ளது.
இதனை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக எஸ்.பி., நஜ்மல் கோதாவிடம் புகார் தெரிவித்தார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முத்துலாபுரத்தை சேர்ந்த சுந்தராம்பாள், 47. நந்தகுமார், 34. பாலசுந்தரமூர்த்தி, சுகுமாறன், 31.லீலாவதி, 37.குமார், 34. பானுமதி ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். கோவையை சேர்ந்த சீனிவாசராகவன், சார்பதிவாளர் கருப்பசாமி, சுப்புராம், பாஸ்கரமூர்த்தி, ஜெயலட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.