sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மக்களைத் தேடி மருத்துவம் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

/

மக்களைத் தேடி மருத்துவம் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

மக்களைத் தேடி மருத்துவம் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

மக்களைத் தேடி மருத்துவம் விருதுநகர் மாவட்டம் முதலிடம்


ADDED : நவ 20, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நீரிழிவு நோய்க்கு சிறப்பான சிகிச்சை வழங்கி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்த 45 வயது, அதற்கு மேல் உள்ள நோயாளிகள், நடக்க இயலாதவர்களுக்கு பெண் தன்னார்வலர்கள் மூலமாக மருந்துகள் வழங்கப்படுகிறது.

மேலும் இல்லத்தில் வழங்கக்கூடிய நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் செவிலியர் மூலம் வழங்குதல், இயன்முறை மருத்துவ சிகிச்சை, சிறுநீரக நோயாளிகளை பராமரிக்க சுய டயாலிசிஸ் செய்வதற்கான பைகள் வழங்குதல், குடும்பத்தில் பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் உடல்நலத் தேவைகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பது போன்ற பிற பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.

2024ல் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நீரிழிவு நோய்க்கு சிறப்பான சிகிச்சை வழங்கி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் யசோதாமணியிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us