sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் இலவச தாய், சேய் ஊர்திகள் வேண்டும்

/

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் இலவச தாய், சேய் ஊர்திகள் வேண்டும்

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் இலவச தாய், சேய் ஊர்திகள் வேண்டும்

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் இலவச தாய், சேய் ஊர்திகள் வேண்டும்


ADDED : நவ 13, 2024 07:27 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் ; விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் முடித்து வீடு திரும்ப நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் இலவச தாய்,சேய் ஊர்திகள் வழங்க வேண்டும்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் வங்கி, கடத்தலை தடுக்க சென்சார் என மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரு மாதத்திற்கு 500 பிரசவங்களுக்கு மேல் நடக்கிறது.

இங்கு பிரசவம் முடித்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக இலவச தாய் சேய் ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

ஆனால் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போது வழங்கப்பட்ட ஒரு இலவச தாய், சேய் ஊர்தியே தற்போது மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் செயல்படுகிறது. இதுவரை கூடுதல் ஊர்திகள் வழங்கப்படவில்லை. உள்ளது.

இந்த ஊர்தி ஒரு முறை தாய், சேய் இறக்கி விட சென்று விட்டால் திரும்ப வரும் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வாகனத்திற்காக காத்திருக்காமல் இருக்க அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்,சேய் ஊர்தியை அழைக்கின்றனர்.

ஆனால் அங்குள்ள வாகனமும் வெளியே சென்று விட்டால் கைக்குழந்தையுடன் காத்திருக்க வேண்டிய நிலையே தொடர்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு கூடுதலாக இலவச தாய், சேய் ஊர்திகளை வழங்கி வாகனத்திற்காக காத்திருக்கும் நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us