ADDED : ஆக 04, 2011 11:22 PM
மதுரை:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கீதா டிரஸ்ஸஸ்சின் கிளை
திறப்பு விழா நடந்தது.
தரைத்தளத்தில் பூனம், சிந்தட்டிக், காட்டன், பேன்சி
சேலை ரகங்களும், முதல் மாடியில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கென
தனிப்பிரிவும் செயல்படுகிறது. இப்பிரிவு பத்மநாதபுரம் அரண்மனை தோற்றத்தில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாடியில் சுடிதார் மற்றும் ரெடிமேட்
ஆடைகள் உள்ளன. உரிமையாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். குருசாமி, கூடலிங்கம்
ஆறுமுகச்சாமி, இ.எம். ஏ.ஆர்., ஜவுளிக்கடை உரிமையாளர் ரமணி, திலகராஜ்
ஆறுமுகச்சாமி, நாடார் உறவின் முறைச் சங்க தலைவர் பழனிச்செல்வம், தொழில்
வர்த்தக சங்கத் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.ஆக., 6ம் தேதி வரை
வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று
வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.