ADDED : ஆக 05, 2011 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீடுகளில் புகுந்து திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் பரசுராமன் வீடு,ஏ.ராமலிங்காபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி, கோதை நகரில் புரு÷ஷாத்தமன் வீட்டில் புகுந்து 9லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அத்திக்குளத்தை சேர்ந்த ரா.
பாலமுருகன்(34) மா. பாலமுருகன் (30) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து, அவர்கள் திருடிய நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.