/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
/
ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
ADDED : ஆக 11, 2011 11:09 PM
ராஜபாளையம் நகராட்சி 39 வார்டில் புதியபஸ்ஸ்டாண்ட் அருகே உள்ளது ஐ.என்.டி.யு.சி., நகர்.
இங்கு ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரைப்படி 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பு ஜன.1995 ல் துவக்கப்பட்டது. தமிழகத்திலே இங்குதான் முதலாவதாக இதன் அமைப்பு துவக்கப்பட்டது. போலீசுக்கு உதவியதுடன், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி பெறுவதிலும் கவனம் செலுத்தினர். õதம் ஒரு முறை அரசு அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்தியபோது, அதிகாரிகளின் நேரடி தொடர்பு கிடைத்து, பல பணிகளும் நடந்தன. இதன் மூலம் இங்கு 95 ஏப்ரலில் குடிநீர் இணைப்புகிடைத்தது. ஒற்றுமையாக செயல்பட்டு, பஸ்ஸ்டாப் உள்பட பல காரியங்களை சாதித்தனர். கிடைத்த வசதிகளை பராமரிக்க, 1997ல் குடியிருப்போர் நல சங்கமாக மாற்றி செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய பிரச்னை குறித்து சங்க தலைவர் ராஜேந்திர ராஜா, உதவி தலைவர் சக்தி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் சிவகுமார் நம்மிடம் மனம் திறக்கின்றனர். ராஜேந்திர ராஜா: பீமராஜா ரோடை அகலப்படுத்தி ஐ.என்.டி.யு.சி.,நகர் பின்புறம் உள்ள ரோடுடன் இணைக்கவேண்டும். இது டி.பி.மில்ஸ் ரோட்டில் இருந்து புதிய பஸ்ஸ்டாண்ட் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இந்த பகுதியில் சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளியூர்களில் இருந்து பஸ்களில் வரும் மாணவர்களுக்கு வசதியாகவும் இருக்கும். ரோடு வசதி இல்லாததால் மாணவர்கள் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.இதனால் விபத்து அபாயமும் உள்ளது. அதிகாரிகளை கேட்டும் நடவடிக்கை இல்லை.
சக்திராஜா: சோழபுரம், பச்சைமடம், எம்.ஆர்.,நகர், முகில்வண்ணம்பிள்ளை தெரு மாணவர்கள் ஐ.என்.டி.யு.சி.,நகர் பின்புறம் உள்ள ரயில்வே கீழ்பாலம் வழியாக செல்கின்றனர். சத்திரப்பட்டி ரோடு ரயில்வேகேட் மூடினால், இந்த வழியாக தான் மக்கள் செல்கின்றனர். இங்கு கழிவுதண்ணீர் தேங்கி நடக்க முடியாத நிøல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ரோடு அமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ராமசாமி: விரிவாக்க பகுதிகளில் வாறுகால், தார்ரோடு வசதி இல்லை. இரவில் செல்லும் மக்கள் தடுமாறுகின்றனர். ஐ.என்.டி.யு.சி.நகர் நகராட்சியில் இருந்தாலும், மின்இணைப்பு கிராம பகுதியில் இருந்து கிடைக்கிறது. கிராமங்களில் ஏதாவது பணி நடந்தால், இங்கு பலமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இங்கு மின்பிரச்னை என்றால், கிராமங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர். வோல்டேஜ் பிரச்னை அதிகம் உள்ளது. சிவகுமார்: 300 ரேஷன் கார்டுகள் இருந்தும் இங்கு ரேஷன் கடை இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரியதெரு, எம்.ஆர்.,நகர், முகில்வண்ணம்பிள்ளை தெரு கடைகளுக்கு செல்கின்றனர். ரேஷன் கடை அமைய இதற்கான இடம் தர பலரும் தயாராக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
-நமதுசிறப்பு நிருபர்-