sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அ.தி.மு.க., நகராட்சி தலைவர்வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு

/

அ.தி.மு.க., நகராட்சி தலைவர்வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு

அ.தி.மு.க., நகராட்சி தலைவர்வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு

அ.தி.மு.க., நகராட்சி தலைவர்வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு


ADDED : செப் 25, 2011 09:56 PM

Google News

ADDED : செப் 25, 2011 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அ.தி.மு.க.,வேட்பாளர்கள் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகர செயலாளர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் முனியசாமி. இவர் நகராட்சி தலைவர் பதவிக்காக தனது மனைவிக்கு சீட் கேட்டிருந்தார். அவர் 26 வது வார்டில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்து ராஜ் மனைவி செந்தில்குமாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தலைவர் பதவிக்கு வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி சென்னை சென்று வந்தார். ஆனால் எவ்வித மாற்றமும் நிகழ வில்லை. இந்நிலையில் நகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு பட்டியல் தொகுதி செயலாளர் சிந்து முருகன் மூலம் வழங்கப்பட்டது.

இதில் நகர செயலாளர் முனியசாமியின் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஏற்கனவே தனது மனைவிக்கு சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த முனியசாமிக்கு தனது ஆதரவாளர்களுக்கும் சீட் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தார்.இந்நிலையில் அவர் வார்டு வேட்பாளர்கள் தேர்வு பட்டியலை மாற்ற வலியுறுத்தி நேற்று காலை ஸ்ரீவி.,பஸ் ஸ்டாண்ட் அருகே உண்ணா விரதம் இருக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., நகராட்சி வேட்பாளர் தேர்வு குறித்த குழப்பமான சூழ்நிலையில் நேற்று நகர செயலாளர் உண்ணா விரதம் இருக்கப் போவதாக பரவிய செய்தியால் அக்கட்சியினர் கலங்கி போயினர். இந்நிலையில் தற்போது அறிவித்துள்ள வேட்பாளர்களின் வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் எந்தளவு தேர்தல் பணி செய்வர் என்பது போக போகத்தான் தெரிய வரும்.






      Dinamalar
      Follow us