sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு

/

தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு

தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு

தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு


ADDED : அக் 07, 2011 10:33 PM

Google News

ADDED : அக் 07, 2011 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : ''தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக,''மாவட்ட கவுன்சில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவக்குமார் கூறினார்.

சிவகாசி ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5வது வார்டில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும், சிவகாசி தொகுதி செயலாளரும், வேட்பாளருமான சிவக்குமார் ,வடமலாபுரம்,பள்ளபட்டி,பேராபட்டியில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க.,ஆளுங்கட்சியாக உள்ளதால் ,என்னை வெற்றி பெறச் செய்தால், என்னுடைய நிதி மட்டுமின்றி, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நிதி பெற்று, பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவேன். பள்ளபட்டி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பேராபட்டியில் ரேஷன் கடை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.அங்கு உடனடியாக புதிய ரேஷன் கடை அமைக்கப்படும்.புதிதாக வாறுகால்,தெருவிளக்கு மற்றும் சிமென்ட் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வரால் வழங்கப்படும் மிக்சி,கிரைண்டர்,பேன் மற்றும் ஆடு மாடுகள் இப்பகுதி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசின் கூடுதல் நிதி பெற்று செயல்படுத்துவேன். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.








      Dinamalar
      Follow us