sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீணாகுது தண்ணீர்: ஷட்டரை சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

வீணாகுது தண்ணீர்: ஷட்டரை சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

வீணாகுது தண்ணீர்: ஷட்டரை சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

வீணாகுது தண்ணீர்: ஷட்டரை சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 15, 2024 06:24 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம். சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டர் பாசன வசதி உடையது.

இதனை நம்பி நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேலும் அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

கடந்த காலங்களிலும் இதே போன்று மதகில் ஷட்டர் பழுதால் தண்ணீரை தேக்க வழியின்றி வீணாக வெளியேறிவிடும். இதனை தற்காலிகமாக சரி செய்வர். தற்போது மழையும் இல்லாமல் வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் மட்டம் குறைந்த நிலையில் முதல் மதகில் ஷட்டர் பழுதால் இருக்கின்ற குறைந்த அளவு தண்ணீரும் வெளியேறி வருகின்றது. இதனால் அணையின் ஒரு பகுதி வறண்டு காணப்படுகிறது.

மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதுமே இந்த அணையில் குறைந்தது 14 அடி வரை தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது பத்து அடியாக குறைந்து விட்டது. அடுத்து மழை பெய்து தண்ணீர் வந்தாலுமே தேக்குவதற்கு வழி இல்லாமல் வீணாக வாய்ப்புள்ளது.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பழுதடைந்த ஷட்டரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us