/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
சிவகாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : ஏப் 23, 2025 05:58 AM

சிவகாசி : சிவகாசி வடக்கு ரத வீதியில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடி வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
புதுத்தெரு, அம்மன் கோவில் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, வடக்கு ரத வீதி, முருகன் கோயில் தேரடி முக்கு, புது ரோடு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரத வீதியில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகி ரோட்டில் ஓடுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில் குழாய் உடைந்து குடிநீரும் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தவிர ரோடும் சேதம் அடைந்து வருகின்றது.

