sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை மக்கள் திண்டாட்டம்

/

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை மக்கள் திண்டாட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை மக்கள் திண்டாட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்னை மக்கள் திண்டாட்டம்


ADDED : மார் 05, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.எஸ்.ஆர்., நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் பிளான்டில் நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. நேற்று குறைதீர் கூட்டத்திற்கு வந்த மக்கள் கொளுத்தும் வெயிலால் தண்ணீருக்கு திண்டாடினர்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலகங்களில் குடிநீர் வசதி உள்ளது. அலுவலர்களுக்கும், திட்ட சேவை தொடர்பாக வந்து செல்லும் மக்களுக்கும் குடிநீர் பிரச்னை இல்லை.

ஆனால் குறைதீர் கூட்டம் வரும் மக்கள் பெரும்பான்மை சி.எஸ்.ஆர்., நிதியில் சிறுதானிய கடை அருகே கட்டப்பட்டுள்ள பிளான்டில் இருந்து தான் குடிநீரை குடிப்பர். இந்நிலையில் நான்கு நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லை.

வெயிலோடு அலைந்து மனு அளிக்க, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வருவோர் மர நிழலில் இப்பகுதியில் தான் நிற்பர். இங்கு குடிநீர் கிடைத்ததால் முதியவர்கள், போட்டி தேர்வு பயிலும் மாணவர்கள், மனு அளிக்க வந்து செல்வோர் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் நான்கு நாட்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். நேற்ற 400க்கும் மேற்பட்ட மக்கள் மனு அளிக்க வந்தனர். இவர்களுக்கு இந்த பிளான்டில் குடிநீர் கிடைக்காததால் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us