sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அணைகளுக்கு நீர் வரத்து

/

 அணைகளுக்கு நீர் வரத்து

 அணைகளுக்கு நீர் வரத்து

 அணைகளுக்கு நீர் வரத்து


ADDED : நவ 24, 2025 09:25 AM

Google News

ADDED : நவ 24, 2025 09:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

சில நாட்களாகவே வத்திராயிருப்பு, சுற்றுவட்ட கிராமங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 40.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 224.38 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டது. அணையில் இருந்து 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கோவிலாறு அணையில் 46.8 மி.மீ., மழை பதிவான நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது.

வத்திராயிருப்பில் 37.4 மி.மீ., மழை பதிவானது. சூறாவளி காரணமாக கூமாபட்டி ரோட்டில் இருந்த சில மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் 28 மி.மீ., மழை பதிவான நிலையில் கண்மாய்களுக்கு பெரிய அளவில் நீர் வரத்து ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.






      Dinamalar
      Follow us