sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு

/

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு


ADDED : செப் 29, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 29, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ஆணைகுட்டம் பகுதி விவசாயிகள் 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் தற்போது குலை தள்ளும் பருவநிலையை எட்டியுள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது. வாழை வளரும் பருவத்திலேயே இந்தக் காட்டுப் பன்றிகள் வேரோடு சேதப்படுத்துகின்றது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், விவசாயி, கிணற்று பாசனத்தை நம்பி வாழை பயிரிடப்படுகின்றது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் தங்கள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது. இதனை விரட்டுவதற்கும் வழி இல்லை. இரவு முழுவதும் கண்விழித்து காவல் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வாழையில் பெரிய நஷ்டம் ஏற்படுகின்றது. வனத்துறையினர் காட்டு பன்றியை கட்டுப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us