sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்

/

கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்

கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்

கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்


ADDED : மார் 18, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலி முகவரி சான்று கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நேற்று முதல் துவங்கியது.

2016ல் சிவகாசியை சேர்ந்த கணேஷ் என்பவரின் முகவரி, அடையாள அட்டை சான்றுகள் ஜெராக்சை போலியாக கொடுத்து சிம் கார்டை வாங்கியதாக கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்டுகள் சைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் மீது சிவகாசி டவுன் போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு விருதுநகர் க்யூ பிராஞ்ச் போலீசிற்கு மாற்றப்பட்டது.

இருவரும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கோவை சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது.

இந்நிலையில் 9 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று முதல் சாட்சி விசாரணை துவங்கியது. மாவோயிஸ்டுகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சாட்சிகள் 3 பேரிடம் விசாரணை நடந்தது. விசாரணையை ஏப்.,8க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us