ADDED : டிச 19, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஏ.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 50.நேற்று மதியம் 1:30 மணி க்கு சாத்துார் - நென்மேனி ரோட்டில் ரயில்வே கிராசிங்கில் கேட் பூட்டி இருப்பதை பார்த்தும் தண்டவாளத்தை நடந்து கடக்க முயன்ற போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் இவர் மீது மோதியதில் காயமடைந்தார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

