sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்

/

சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்

சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்

சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்


ADDED : நவ 12, 2025 12:10 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: -ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் இல்லாமல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் மேல் மாடியில் சிரமத்திற்கு மத்தியில் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மதுவிலக்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. இதில் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு என சொந்த கட்டடம் கட்டப்பட்டதால் பழைய கட்டடத்தில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இதே வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால் தற்போது டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புதிய கட்டடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. இதனால் பெண் போலீசார்களும், மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டி தர வேண்டும் என போலீசாரும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us