விருதுநகர் : விருதுநகரில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். அனைவரும் விழிப்பணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மகளிர் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா, முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சத்திரப்பட்டி: ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது. தாளாளர் பழனி குரு தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி தர்மராஜ் வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற குடும்ப நல ஆலோசகர் சாந்தி வாழ்த்தி பேசினார். கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடந்தது. முதல்வர் நாகலட்சுமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர் மனோ ஜூலியட் செய்தார்.

