ADDED : மார் 11, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி கே.ஆர்.பி. கலை, அறிவியல் கல்லுாரியின் மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் உஷா ஷாலினி வரவேற்றார்.
டாக்டர் நர்மதா பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. வணிகவியல் துறை தலைவர் பிரபாவதி உட்பட அனைத்து பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கணினிஅறிவியல் துறை தலைவர் அனிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி மகளிர் மேம்பாட்டுக் கழகத்தினர் செய்தனர்.
