sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகளிர் சுகாதார வளாகம் சேதம் பெண்கள் அச்சம்

/

மகளிர் சுகாதார வளாகம் சேதம் பெண்கள் அச்சம்

மகளிர் சுகாதார வளாகம் சேதம் பெண்கள் அச்சம்

மகளிர் சுகாதார வளாகம் சேதம் பெண்கள் அச்சம்


ADDED : அக் 24, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் பயன்பாட்டில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் சேதம் அடைந்துள்ளதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டடம் சேதமடைந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதார வளாகம் மீண்டும் சேதமடைந்துள்ளது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்தின் சுவற்றில் இருந்து செங்கற்கள் விழுகின்றது. இதனால் பெண்கள் அச்சத்துடனே சென்று வர வேண்டி உள்ளது. தவிர இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் இடிந்த பகுதியின் வழியாக சுகாதார வளாகத்தின் உள்ளே நுழைந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சேதம் அடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர். செல்ல பாண்டியன், ஊராட்சி செயலர், சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us