sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

/

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்


ADDED : ஜன 21, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ள னர்.

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன உயிரின அமைப்பு சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு நடக்கும்.

அதன்படி இந்த ஆண்டும் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை ஆகிய 5 காப்பகங்களில் கணக்கெடுக்கும் பணிதுவங்கியுள்ளது.

கடந்த வாரம் வரை வனத்துறையினர் நேரடி பார்வையின் மூலம் புலி களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த னர்.

தற்போது 4 வன சரகங்களிலும் 150 க்கு மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.

துணை இயக்குனர் முருகன் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அடர் வனத்தின் உட் பகுதியில் பொருத்தப்படும் இந்த கேமராக்கள் 45 நாட்கள் புலிகள் நடமாட்டத்தை பதிவு செய்யும்.

பின்னர் சேகரிக்கப்பட்ட தரவுகள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, புலிகள் எண்ணிக்கை தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us